100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நெல்லையில் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்

நெல்லை: நெல்லையில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று காலை நடந்தது. பாளை மத்திய சிறை அருகே தொடங்கிய சைக்கிள் பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் தலைமை தாங்கி சைக்கிள் ஓட்டிவந்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பெருமாள், மாநகராட்சி ஆணையர் கண்ணன், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏரளமானோர் பங்கேற்று விழிப்புணர்வு முழக்கமிட்டு ெசன்றனர். முக்கிய சாலைகள் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை இந்த சைக்கிள் பேரணி நடந்தது. …

Related posts

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு