100 நாள் வேலை கேட்டு பெண்கள் மனு

தூத்துக்குடி, ஜன. 23: நூறு நாள் வேலை கேட்டு கயத்தாறு தாலுகாவைச் சேர்ந்த எட்டுநாயக்கன்பட்டி பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கயத்தாறு தாலுகா காமநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட எட்டுநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனு: 100 நாள் வேலை திட்டத்தில் ஏற்கனவே வேலை செய்து வந்த எட்டுநாயக்கன்பட்டி ஊரை சேர்ந்த பெண்கள் சிலருக்கு தற்போது 100 நாள் வேலை வாய்ப்பு வரவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும் சிலருக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை கிடைப்பதில்லை. சிலருக்கு வேலை செய்ததற்கான பணமும் சரியாக கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக 100 நாட்கள் வேலையும், வேலை செய்ததற்கான பணமும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு