அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு பிரதமர் மோடி வழங்கிய சந்தனப்பெட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எள் இடம்பெற்றுள்ளது. அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது ஜில் பிடன் வழங்கிய தனிப்பட்ட விருந்தில்கலந்து கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைஞரால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியை பரிசாக வழங்கினார். மைசூரில் இருந்து பெறப்படும் சந்தன மரம் கொண்டு இந்த சந்தன பெட்டி நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தன பெட்டியில் பத்து நன்கொடைகள் உள்ளன. 80 வயதை கடந்தவர்களுக்கு வழங்கப்படும் தானத்தை குறிக்கும் வகையில் 10 வகை பொருட்கள் இடம்பெற்றுள்ளன.