10 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை: தாய் உள்பட 3 பேர் கைது

சென்னை: பிறந்து 10 மாதமே ஆன ஆண் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, தாய் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் 23வது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி விஜயலட்சுமி (30). இவர்களது 10 மாத ஆண் குழந்தை முத்துராஜ். இந்த குழந்தையை புரோக்கராக செயல்பட்ட செங்குன்றம் நாரவாரிகுப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த செல்வம், அவரது மனைவி தங்கம் என்பவரிடம் ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். அவர், 10 மாத குழந்தையை செங்குன்றம் காமராஜர் நகர் பாத்திமா தெருவை சேர்ந்த பாண்டுரங்கன் மனைவி நவநீதம் (69) என்பவருக்கு ரூ.3 லட்சத்துக்கு கடந்த மாதம் விற்பனை செய்துள்ளார். இதுபற்றிய தகவலறிந்த சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர் லலிதா செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் 10 மாத குழந்தையை மீட்டு, சென்னை அண்ணா நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர். குழந்தையை விற்ற தாய் விஜயலட்சுமி, பணம் கொடுத்து வாங்கிய நவநீதம், புரோக்கராக செயல்பட்ட தங்கம் ஆகிய 3 பேரையும் செங்குன்றம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது