10 மடங்கு அபராத தொகை வசூலிப்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்; அண்ணா தொழிற்சங்க பேரவை வலியுறுத்தல்

சென்னை: 10 மடங்கு அபராத தொகை வசூலிப்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என அண்ணா தொழிற்சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் தரைவழி சாலை போக்குவரத்து  2019ம் ஆண்டு செப்டம்பரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபடியான  அபராத கட்டண முறைகளை வெளியிட்டது. தமிழகத்தில் கடந்த 26ம் தேதி முதல் பத்து மடங்கு அபராத தொகை, வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. அரசு வசூலிக்கும் அபராத தொகையில் இருந்து 700-800 ரூபாய் மதிப்புள்ள தலைகவசத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கலாம். அபராதத்திற்கு பதில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு முதல் முறை எச்சரிக்கையும்,  இதே நிலை தொடர்ந்தால்   நூதனமான முறையில் சிறிய தண்டனையாக  மரம் நடுவது,  தூய்மை பணி, பொது வேலை என்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமே தவிர மக்களை ஒரேயடியாக பழி வாங்க கூடாது. எனவே இந்த புதிய அபராத தொகை வசூலிப்பதை, உடனே அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்