10 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரில் ஆரம்பாக்கம் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் மடக்கி சோதனை செய்தனர். அதில் அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் தலையாரிபாளையத்தை சேர்ந்த அஜித்குமார்(26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து அஜித்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். …

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது