Monday, July 8, 2024
Home » 10 ஆண்டுகளாக தமிழக அரசு பாராமுகம் முதல்வர் இருந்தும் இளைஞர்களுக்கு பயன் தராத சேலம் ஐ.டி., பார்க்: விடிவுகாலம் பிறக்கும் என நம்பிக்கை

10 ஆண்டுகளாக தமிழக அரசு பாராமுகம் முதல்வர் இருந்தும் இளைஞர்களுக்கு பயன் தராத சேலம் ஐ.டி., பார்க்: விடிவுகாலம் பிறக்கும் என நம்பிக்கை

by kannappan

சேலம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழக முதல்வராக இருந்தும், சேலம் ஐடி பார்க்கை கண்டுகொள்ளாததால், படித்த இளைஞர்களின்  வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை பிரதானப்படுத்தி தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், கடந்த தேர்தலில் அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்து காற்றில் பறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  குறிப்பாக, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என அள்ளிவிட்ட அதிமுக அரசு, ஏற்கனவே அறிவித்த சேலம் ஐடி  பார்க்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இதனால், இளைஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த படித்த மற்றும் கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கென, சேலத்தில் ஐடி  பார்க் திறக்கப்படும் என, கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்காக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை  டால்மியா போர்டு அருகே சுமார் 164 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், 58 ஏக்கர் நிலம் ஐடி பார்க்கிற்காக கையகப்படுத்தப்பட்டு, பன்னாட்டு  நிறுவனங்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனிடையே, கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்ற அதிமுக அரசு, திமுக அறிவித்த திட்டம் என்ற  ஒற்றை காரணத்திற்காக, ஐடி பார்க் பணியை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதேசமயம், சேலத்தில் உள்ள தொழில் நிறுவனத்தினர் மற்றும்  தன்னார்வலர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியால், பெயரளவிற்கு நிர்வாக கட்டிடம் கட்டப்பட்டது. சுமார் 10 ஆயிரம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள  அந்த கட்டிடம் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வெறுமனே அழைப்பு விடுத்தால் மட்டும், தனியார் நிறுவனங்கள் வந்துவிடப்போவதில்லை. தடையில்லா மின்சாரம், 24 மணிநேர குடிநீர்  வசதி, போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தும் இடம் என அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டியது, அரசின்  கடமையாகும். ஆனால், தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவே இல்லை. இந்த சூழ்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர்  முதல்வராக பொறுப்பேற்றதால், பல்வேறு மாற்றங்கள் நிகழும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக, முடங்கி கிடக்கும் சேலம் ஐடி பார்க்,  புத்துயிர்பெறும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை பிறந்தது. ஆனால், அத்தனை நம்பிக்கையும், வீணாகி,  ஐடி பார்க் இன்னமும் முடக்கத்திலேயே உள்ளது. இதுகுறித்து படித்த இளைஞர்கள் சிலர் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், திமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்கள், அரசியல் காழ்புணர்ச்சியால் முடக்கப்பட்டு விட்டது. குறிப்பாக, இளைஞர்களுக்காக  தொடங்கப்பட்ட ஐடி பார்க் எந்த பலனும் இல்லாம் போய்விட்டது. சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் லட்சக்கணக்கான பெண்கள்  படித்து வேலைக்காக காத்திருக்கின்றனர். சென்னை, பெங்களூரு போன்ற வெளியூரில் பணி கிடைத்தாலும், பெண்களை அனுப்ப பெற்றோர் தயக்கம்  காட்டுகின்றனர். இதனால் உரிய தகுதி இருந்தும் வீட்டிற்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சேலம் ஐடி பார்க் முழுமையாக செயல்பட்டால்,  பல நிறுவனங்கள் வந்து, உள்ளூரிலேயே பெண்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசால் முடக்கப்பட்ட சேலம்  ஐடி பார்க்கிற்கு, வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதன்மூலம் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர்.   சேலம் மாவட்டத்தில், திமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்கள், அரசியல் காழ்புணர்ச்சியால் முடக்கப்பட்டு விட்டது. குறிப்பாக, இளைஞர்களுக்காக  தொடங்கப்பட்ட ஐடி பார்க் எந்த பலனும் இல்லாம் போய்விட்டது. சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் லட்சக்கணக்கான பெண்கள்  படித்து வேலைக்காக காத்திருக்கின்றனர். சென்னை, பெங்களூரு போன்ற வெளியூரில் பணி கிடைத்தாலும், பெண்களை அனுப்ப பெற்றோர் தயக்கம்  காட்டுகின்றனர்….

You may also like

Leave a Comment

three + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi