Monday, July 1, 2024
Home » 10 ஆண்டாக விவசாயிகளுக்கு வழங்காத ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேச்சு

10 ஆண்டாக விவசாயிகளுக்கு வழங்காத ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேச்சு

by kannappan

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உணவு அமைச்சர் சக்கரபாணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 195 தனியார் அரிசி ஆலைகள் புதிதாக சேர்க்கப்பட்டு தற்போது 571 அரவை முகவர்களுடன் 8 லட்சத்து 48 ஆயிரத்து 321 டன் அரவைத்திறன் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 210 ஆலைகளில் புதிதாக கலர்சாடர்கள் பொருத்தப்பட்டு மொத்தம் 316 அரவை ஆலைகள் கலர்சாடர்களுடன் இயங்கி வருகின்றன.நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றிற்கு சன்ன ரகத்திற்கு ₹100 மற்றும் பொது ரகத்திற்கு ₹75 உயர்த்தி வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை.நெல் கொள்முதல் நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ள சுமைதூக்கும் தொழிலார்களுக்கான ஊதியம் மூட்டை ஒன்றிற்கு ₹3.25 இருந்து ₹10 ஆக உயர்த்தப்பட்டது. பருவக்கால பட்டியல் எழுத்தாளர்களுக்கு சம்பளம் மாதம் ஒன்றிற்கு ₹2250 உயர்த்தியதோடு தினப்படியாக ₹120 வழங்கப்பட்டது. பருவக்கால உதவுபவர்களுக்கும், காவலர்களுக்கும் சம்பளம் மாதம் ஒன்றிற்கு ₹2309 உயர்த்தியதோடு தினப்படியாக ₹100 வழங்கப்பட்டது. ஆண்டிற்கு ₹83 கோடி கூடுதலாக அரசிற்கு செலவு ஏற்பட்டாலும் முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதிதாக 8 லட்சத்து 85 ஆயிரத்து 424 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 185 நபர்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் தருவாயில் உள்ளது. ஒரு பொங்கல் பை ₹31க்கு வாங்கியது கூட தெரியாமல் ₹60 க்கு வாங்கியதாக எடப்பாடியும், அண்ணாமலையும் அப்பட்டமான பொய் பேசி வருகின்றனர். கரும்புக்கும் பைக்கும் சேர்த்து மொத்த கொள்முதல் விலை 140 கோடி ரூபாய் ஆகும். உண்மைநிலை இவ்வாறு இருக்க பொங்கல்பை மற்றும் கரும்புக் கொள்முதலில் மட்டும் ₹135 கோடி ஊழல் நடந்துள்ளது என ஐபிஎஸ் தேர்வு பெற்றவர் அப்பட்டமாக பொய் பேசிவருகிறார்.  …

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi