திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் பள்ளிக்கு வர வேண்டும். பதிவுப்பணி நடைபெறும் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுகள் மேற்கொள்ளும் போது அரசு விதித்துள்ள கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….