பள்ளி வேனில் சிக்கி 1 வயது குழந்தை பலி

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள சௌதாபுரம் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். நூற்பு ஆலை மேற்பார்வையாளர். மனைவி அபிநயா. விசாகன்(4), வெற்றிவேல்(1) என 2 குழந்தைகள் உண்டு. யூகேஜி படிக்கும் விசாகளை நேற்று காலை 8 மணியளவில் வீட்டு முன் வந்த பள்ளி வேனில் அபிநயா ஏற்றி விட்டுள்ளார். பின்னர் டிரைவர் செல்வராஜ் வேனை நகர்த்தியபோது அபிநயாவுடன் நின்றிருந்த குழந்தை வெற்றிவேல் பின்புற சக்கரத்தினுள் விழுந்தான். இதில் சக்கரம் தலையில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தான். வேன் டிரைவர் செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை