1 கோடி கொசுக்களை ஒழிப்பேன்: சுயேச்சை வேட்பாளர் நூதன பிரசாரம்

கரூர்: கரூரை சேர்ந்தர் ராஜேஷ் கண்ணன் (43). காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், கரூர் மாநகராட்சி 26வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். வாக்காளர்களிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த துண்டு பிரசுரத்தில், கரூர் மாநகராட்சியில் 10திட்டங்களை முன் வைத்துள்ளதாகவும், முதல் திட்டமாக 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான்பூச்சிகள், 10ஆயிரம் எலிகள், 100தெரு நாய்கள் ஆகியவற்றை ஒழிப்பது தான் தனது முதல் திட்டம் என துண்டு பிரசுரத்தில் தெரிவித்திருந்தார். இதில் 2வது திட்டத்துடன் இன்று சந்திப்பதாக வாக்காளர்களிடம் கூறி சென்றுள்ளார். இந்த நூதன பிரசாரம் வார்டு பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது….

Related posts

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு

அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…