1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் பொன்னை சுற்றுப்புற பகுதிகளில்

பொன்னை, செப். 25: பொன்னை சுற்றுப்புறப் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் மாவட்டம் பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் பகல் 12 மணியளவில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் அத்தியாவசிய வேலைகளுக்கு சென்ற பெண்கள் உட்பட அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் குழந்தைகளுடன் சென்ற பெண்கள் உள்ளிட்டோர் திடீர் கனமழையால் சாலையோரங்களில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் மரத்தடியில் நின்று சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழை வெள்ளம் விளை நிலங்களில் தேங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு