₹64 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், ஆக.22: காரிமங்கலம் வாரச்சந்தையில் ₹64 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது. காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 600 ஆடுகள், 500 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ₹34 லட்சத்திற்கு ஆடுகளும், ₹27 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி ₹3 லட்சத்திற்கு விற்பனையானது. மழை காரணமாக கடந்த வாரத்தை காட்டிலும், கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி