₹36 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர், செப்.28: அரூர் புளுதியூர் வாரசந்தையில் ₹36 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது. அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெறுகிறது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்டைகளை வாங்க வந்தனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ₹8,000 முதல் ₹35,000 வரையும், ஆடுகள் ₹5,500 முதல் ₹10,100 வரையும் விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், ₹36 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை