₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம், ஜூன் 22: ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில், ₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம் போனது. ராசிபுரம்- சேலம் சாலை அருகே கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. இந்த மையத்தில் நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று 59,600 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனையானது. இதில், அதிகபட்சமாக கிலோ ₹570க்கும், குறைந்தபட்சமாக ₹561க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் ₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம் போனது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை