₹30 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர், ஆக.15: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 268 விவசாயிகள் 1120 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்திருந்தனர். பிசி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,411 முதல் ₹7,820 வரையும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,029 முதல் ₹6,266 ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக ₹30 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை