₹22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர், செப்.14: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த சந்தையில் ஆடு, கோழிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரு ஆடு ₹5,200 முதல் ₹10,000 வரை விற்பனையானது. சந்தையில் நேற்று மொத்தம் ₹22லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்