₹19 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்ைட, அக்.9: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். அதேபோல ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் விரலி ரகம் 180 மூட்டையும், உருண்டை ரகம் 60 மூட்டை, பனங்காளி 10 மூட்டை என மொத்தம் 250 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. விரலி ரகம் அதிகபட்சம் ₹15,455க்கும், குறைந்தபட்சம் ₹9,312க்கும், உருண்டை ரகம் அதிகபட்சம் ₹13,502க்கும், குறைந்தபட்சம் ₹7,469க்கும், பனங்காளி அதிகபட்சம் ₹14,475க்கும், குறைந்தபட்சம் ₹4,369க்கும் என மொத்தம் 250 மூட்டை மஞ்சள் ₹19 லட்சத்திற்கு விற்பனையானது.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு