இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களுக்கு ₹18 கோடி அபராதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து சிறையில் அடைத்தது.இந்நிலையில் இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அயோனா விமலரத்ன, ஒரு படகில் இருந்த 12 மீனவர்களுக்கு தலா ₹1.5 கோடி (இலங்கை பணம்) அபராதம் செலுத்தவும், செலுத்த தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும் நேற்று தீர்ப்பு கூறினார்.

மற்றொரு படகில் இருந்த 10 பேர் மீதான வழக்கு விசாரணையின் போது, படகு உரிமையாளரையும் சேர்க்க வேண்டும் என்று இலங்கை மீன்வளத்துறை கூறி உள்ளது. அதற்கு இந்திய தூதரகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 10 பேரின் காவலை வருகிற 10ம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு