₹17.76 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

தர்மபுரி, நவ.2: தர்மபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடிக்கு தினமும் விவசாயிகள் வெண் பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். நேற்று மாவட்டம் முழுவதிலுமிருந்து மட்டுமின்றி ஈரோடு, திருவண்ணாமலை, உடுமலைப்பேட்டை, கோபிசெட்டிபாளையம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 60 விவசாயிகள் 3,970 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெண் பட்டுக்கூடு அதிகபட்சமாக ₹556க்கும், சரசாரியாக ₹447க்கும், குறைந்தபட்சமாக ₹246க்கும் ஏலம் போனது. ஆகமொத்தம் ₹17,76,442க்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை