₹16.50 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

 

காரிமங்கலம், மே 28: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, தட்ரஅள்ளி, குடிமேன அள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 1.60 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தேங்காய் அளவை பொறுத்து ₹8 முதல் ₹13 வரை
விற்பனையானது. நேற்று சுமார் ₹16.50 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை போல் தேங்காய் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. முகூர்த்த நாட்கள் வருவதால், வரும் வாரங்களிலும் தேங்காய் வரத்து மற்றும் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை