₹15 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

 

காரிமங்கலம், செப்.10: காரிமங்கலம் தேங்காய் சந்தை ேநற்று நடந்தது. இதில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, தட்றஅள்ளி, குடிமேனஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் சுமார் 1 லட்சத்து 50ஆயிரம் தேங்காய்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேங்காயின் அளவை பொறுத்து ₹7 முதல் ₹13வரை பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதில் சுமார் ₹15லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், தேங்காய் வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்