நாமக்கல், செப்.25: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹14 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல்லில் திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 600 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹8619க்கும், மட்டரகம் ₹5519க்கும் ஏலம் போனது. மொத்தமாக ₹14 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.