₹1.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு செங்கம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை ஜன்னல் உடைத்து

செங்கம், ஜூன் 1: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு கடை திறப்பதற்கு சேல்ஸ்மேன் காமராஜ் வந்தார். அப்போது கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையை திறந்து பார்த்தபோது ₹1.50 லட்சம் மதிப்பிலான உயர் ரக மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த செங்கம் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கும் கழற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடை ஜன்னல் உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு