மானாமதுரை, ஆக.4: மானாமதுரை அருகே ஊராட்சியில் உயர் மின்கோபுர ஹைமாஸ் லைட்டுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருேக தெ.புதுக்கோட்டை கிராமத்தில் ஊர் மையத்தில் ஹைமாஸ் லைட்டுகள் போடப்பட்டிருந்தன. இந்த லைட்டுகளில் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 9 லைட்டுகள் கடந்த சில வாரங்களுக்கு முன் திருடு போயின. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவி முத்துலட்சுமி ராமச்சந்திரன் மானாமதுரை போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதன்பேரில் விசாரணை செய்த போலீசார் கீழநெட்டூரை சேர்ந்த அருண்(19), அயன்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தெ.புதுக்கோட்டை அருகே நடந்த கோயில் திருவிழாவிற்கு மைக்செட் போட வந்த போது லைட்டுகளைதிருடிசென்றதாக தெரிவித்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 9 லைட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவர்கள் இருவரையும் ைகது செய்தனர்.