Sunday, June 30, 2024
Home » ஹைதியில் பலி 1,297 ஆக அதிகரிப்பு

ஹைதியில் பலி 1,297 ஆக அதிகரிப்பு

by kannappan

லெஸ் கயாஸ்: ஹைதியில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,297 ஆக அதிகரித்துள்ளது. ஹைதியில் கடந்த சனியன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றது. இந்நிலையில் மூன்றாவது நேற்று கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரது சடலங்கள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5,700 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சேதமடைந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் காயமடைந்த பலர் திறந்த வெளியில் காத்துக்கிடக்கின்றனர். சுமார் 7000 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், 5000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தேவாலயம் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi