ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 10.11.2021 புதன்கிழமை காலை – 11.00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் அருகில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் நடபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா 03.12.2021 அன்று திருநெடுந்தாண்டகமும் , 04.12.2021 முதல் 13.12.2021 வரை பகல் பத்து திருவிழாக்களும், 13.12.2021 அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும், முக்கியத் திருநாளான ஸ்ரீ நம்பெருமாள் இரத்தினங்கியுடன் பரமபத வாசல் திறப்பு 14.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 04.30 – 05.45 மணிக்குள்ளும் நடைபெறும். மேலும் 20.12.2021 ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும், 21.12.2021 அன்று திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழாவும், 23.12.20221அன்று தீர்த்தவாரியும், 24.12.2021 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும்….

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி