ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் பைக் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று காலை பைக் மீது சரக்கு லாரி மோதியது. இதில், பைக்கில் வந்த 2 வாலிபர்களும் லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இப்புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். குன்றத்தூரில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி 2 வாலிபர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கச்சிப்பட்டு அருகே வந்தபோது, பின்னால் வந்த சரக்கு லாரி வேகமாக மோதியது. இதில், இருவரும் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதே சமயம் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பரிதாமாக பலியாகிவிட்டனர். இதை பார்த்ததும் லாரியை விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் இறந்த 2 வாலிபர்களின் சடலங்களை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசரித்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்