ஸ்டுடியோ உடைத்து கேமராக்கள் கொள்ளை

ஆவடி: கொரட்டூர் மாதனாங்குப்பம் கலெக்டர் நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (50), இவர், இதே பகுதி கடப்பா ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி இரவு புருஷோத்தமன் வேலை முடிந்து ஸ்டூடியோவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் ஸ்டுடியோவை திறக்க வந்தார். அப்போது அங்கு ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள இரண்டு கேமராக்கள் கொள்ளை போயிருந்தது. மேலும் மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையை உடைத்து கோமராக்களை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புருஷோத்தமன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜூ பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்….

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது