ஸ்டுடியோவில் திருட முயன்றவர் கைது

தர்மபுரி, அக்.10: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் யுவராஜ்(25). இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன், கடையை மூடிவிட்டு யுவராஜ் சாப்பிட சென்றார். அப்போது, தனது செல்போனில் உள்ள ஆப் மூலம் கடையை கண்காணித்த போது, கடையின் பூட்டை உடைத்து மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்து, கல்லா பெட்டியில் இருக்கும் பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டதை கண்டு திடுக்கிட்டார். பின்னர், உடனடியாக கடையின் அருகே உள்ள தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை கடைக்கு சென்று பார்க்கும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் கடைக்கு சென்று, அந்த நபரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர் நல்லம்பள்ளி பூச்செட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை