ஈரோடு,அக்.13: வேளாண் துறை மூலமாக இலவச மரக் கன்றுகள் வினியோகம் செய்யப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தேக்கு, மகோகனி,மலைவேம்பு,செம்மரம்,சந்தனம்,சவுக்கு போன்ற மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்வதற்காக வினியோகிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் பசுமை இயக்கம் திட்டத்தின் கீழ், இலவசமாக இம்மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. எனவே, தேவைப்படும் மரக்கன்றுகளை,அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு சென்று, விவசாயிகள் தங்களது ஆதார் நகல் மற்றும் நிலத்தின் சிட்டா நகலை சமர்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ராஜமோகன் தெரிவித்துள்ளார்.