வேளாங்கண்ணி நூலகத்தில் புரவலர் சேர்க்கை முகாம்

 

நாகப்பட்டினம்,ஆக.6: வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் புரவலர் சேர்க்கை முகாம் நடந்தது. வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா தலைமை வகித்தார். துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். ரூ.1000 வீதம் கிளை நூலகர் தனகேகரனிடம் செலுத்தி நூலகத்தில் புரவலர்களாக பேரூராட்சி தலைவர் டயானாஷர்மிளா உட்பட 8 பேர் சேர்ந்தனர். மாவட்ட நூலக அலுவலர் ஜான்பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி