வேளாங்கண்ணியில் 650 லிட்டர் புதுச்சேரி சாராயம் பறிமுதல்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஹார்ஷ்சிங் தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று வேளாங்கண்ணி அருகே கலசம்பாடி பாலம் பகுதியில் சோதனை செய்தனர். இதில் அப்பகுதியில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (26) கைது செய்து அவரிடமிருந்து 650 லிட்டர் புதுச்சேரி மாநிலம் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வேளங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை