சென்னை: மதுரையை சேர்ந்தரங்கசாமி (49), தனக்கு தெரிந்த நபருக்கு அரசு வேலை வேண்டி கடந்த 2017ம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணிபுரியும் கண்ணனிடம் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கண்ணன் வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை எம்எம்டிஏ காலனி, திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த கண்ணனை (44), கைது செய்தனர்….