வேலை முடிந்து நடந்து சென்ற லாரி டிரைவருக்கு சரமாரி அடி, உதை: போலீசார் விசாரணை

சென்னை:சென்னை புழல் பகுதியில் நடந்துசென்ற லாரி டிரைவரை மர்ம நபர்கள் 2 பேர் தாக்கிவிட்டு தலைமறைவானார்கள். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை புழல் சிவராஜ் தெருவை சேர்ந்தவர் சேதுராமன் (48). லாரி டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக இவர், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியே வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் இரவு புழல் பகுதியில், வேலையை முடித்துவிட்டு, சேதுராமன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை சரமாரியாக அடித்து, உதைத்துவிட்டு, தப்பி சென்றனர். இதில், படுகாயம் அடைந்த அவர் வலி தாளாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் படி, புழல் போலீசார் வழக்குபதிவு செய்து சேதுராமனை தாக்கியது யார்?, குடும்ப பிரச்னையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதா? என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால்,அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது