வேலை தேடி வந்தவரை தாக்கி பணம் பறிப்பு

 

புதுச்சேரி, ஜன. 29: சென்னை மணலி புதுநகர், சின்ன ஈச்சங்குடி, பெருமாள் கோவில் வீதியை சேரந்தவர் சதீஷ் (40), உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். அந்த வேலை பிடிக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி இரவு அவர் நீதிமன்றம் எதிரில் உள்ள ஏஎப்டி மைதானம் வழியாக நடந்து சென்றார். அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று நகரப்பகுதிக்கு செல்ல வழி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் சதீஷின் விவரங்களை கேட்டுள்ளனர். அவர் வேலை தேடி வந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் சதீஷிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.

சதீஷ் பணம் தர மறுத்ததால், 3 பேரும் சேர்ந்து சதீஷை கையாலும், பீர் பாட்டிலாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர் வைத்திருந்த ரூ.3,500 பணத்தை பறித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.இதில் காயமடைந்த சதீஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயமடைந்த சதீஷை மீட்டு புதுவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து, சதீஷை தாக்கிய போதை ஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்