வேலையில்லாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

கம்பம், ஆக.8: கம்பத்தில் வேலையில்லாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது மகன் மணிகண்டன்(21). கூலிதொழிலாளியான இவர் கடந்த சில வாரங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனேவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது