வேலைக்கு செல்லாத மகன் மனவிரக்தியில் விஷம் குடித்த பெற்றோர்

தேனி, ஏப். 5: தேனி அருகே மதுராபுரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(61). இவரது மனைவி தனலட்சுமி (56). இவர்கள் மகன் கஜேந்திரன். இவருக்கு திருணமாகி 2 குழந்தைகள் உள்ளது. ராணுவத்தில் பணிபுரிந்த கஜேந்திரன் கடந்த வருடம் ராணுவத்தில் இருந்து வந்தவர் மீண்டும் பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில், கஜேந்திரன் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனைக்குள்ளான ரவிச்சந்திரன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் நேற்று மதியம் தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தங்களது சொந்தமான காலியிடத்திற்கு வந்து விஷம் அருந்தினர். அதன்பின் இருவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறி்த்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து