வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே வாய்க்கால் கரையோரம் இருந்த புதரில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். புகளூர் வழியாக செல்லும் ராஜ வாய்க்கால் கரையோரம் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து காய்ந்த நிலையில் புதராக இருந்தது.இந்நிலையில் வெய்யலின் தாக்கத்தால் இதில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் அணைக்க முடியாததால் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.