வேலம்மாள் பள்ளியில் மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: சென்னை, முகப்பேர், வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் ஷீலா, சுகாதார அதிகாரிகள் மன்சூர், சஹானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார். இதில், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தொற்றுநோய்கள் மிகுந்த இந்தக் காலகட்டத்தின் போது இதுபோன்ற தடுப்பூசி முகாமை நடத்திய நிர்வாகத்திற்குப் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்….

Related posts

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்