Sunday, June 30, 2024
Home » வேறொருவருடன் திருமணத்திற்கு முயன்ற காதலி, தாய்க்கு சரமாரி கத்திக்குத்து: கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

வேறொருவருடன் திருமணத்திற்கு முயன்ற காதலி, தாய்க்கு சரமாரி கத்திக்குத்து: கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

by kannappan

திருமலை: காதலை கைவிட்டு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய திட்டமிட்ட இளம்பெண் மற்றும் அவரது தாயை வாலிபர் சரமாரி குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். தந்தை இறந்து விட்ட நிலையில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இளம்பெண்ணும் குண்டூர் அருகே உள்ள ரெப்பள்ளியை சேர்ந்த சந்தீப் (26) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்று கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு காதல் ஜோடி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தீப்பை திருமணம் செய்ய இளம்பெண் மறுத்துள்ளார். இளம்பெண்ணுக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் அறிவுரை கூறியும் அவர் ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து ஊர் பெரியோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை கைவிட்டு இருவரும் பரஸ்ரீபரம் பிரிந்தனர்.இதையடுத்து இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய அவரது உறவினர்கள், நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டனர். இதையறிந்த சந்தீப்புக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதற்கிடையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை சந்தீப் வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் அடிக்கடி போன் செய்தும், வாட்ஸ்ரீ அப்பில் மெசேஜ் அனுப்பியும் டார்ச்சர் செய்துள்ளார். ஆனால் இளம்பெண் இதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சந்தீப், இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து சந்தீப்பின் டார்ச்சரால் வேதனை அடைந்த இளம்பெண், தனது தாயுடன் சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் குடியேறினார். அப்போதும் டார்ச்சர் செய்துள்ளார்.இந்நிலையில் தாய், மகள் இருவரும் நேற்று வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தீப், தனது காதலியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், ‘எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்க கூடாது’ என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தாய், ஓடிவந்து தடுத்துள்ளார். இதனால் அவரையும் சந்தீப் கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின்னர் சந்தீப் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதுகுறித்து அவர்கள் ஐதராபாத் மியாபூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து 3 பேரையும் மீட்டு அங்குள்ள காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

You may also like

Leave a Comment

fifteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi