வேப்பூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

 

குன்னம், ஜூன் 7: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் சுற்று வட்டார பகுதிகள் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வயலப்பாடி, வேப்பூர், ஓலைப்பாடி, அத்தியூர், லெப்பைகுடிக்காடு, ஒகளூர், வயலூர், அகரம்சீகூர் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு மணி நேரமாக பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 2 நாட்களாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது. வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நெல் அறுவடைகள் முடிந்து உழவுக்கு விவசாயிகள் தயாரான நிலையில் தற்சமயம் பெய்து வரும் இந்த மழையால் தண்ணீர் பிரச்னை இல்லாமல் விவசாயம் நடைபெறுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்