வேன் திருடியவர் கைது

திருச்சி, நவ.2: திருச்சியில் வேன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகரன்(57). இவர் கடந்த 30ம் தேதி தனக்கு சொந்தமான மார்ச்சுவாரி வேனை தனது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். இந்த வேனை வந்த மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சந்திரசேகரன் கொடுத்த புகாரன்பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து வேனை திருடிய அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் சஞ்சீவ் தெருவை சேர்ந்த சந்தியாகுவை(23) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்