வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரையோரம் பனை விதை நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சி சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் தலைமையில், கோடியக்காடு கடல் சார்ந்த பகுதியில் பனை விதைகளை நட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.