வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக கடல்சேறு தள்ளி இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென கடற்கரையோரம் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு, மூன்று அடி முதல் நான்கு அடிவரை சேறு ஒதுங்கியுள்ளது. இதனால் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பைபர் படகை கடலில் இயக்க குறைந்தபட்சம் 5 மணி நேரம் போராடி கடலுக்கு செல்கின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் இதே நிலை நீடிப்பதால் கடற்கரையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 அடி அகலத்திற்கு வாய்க்கால் அமைத்து கொடுத்தால் மீனவர்கள் சிரமமின்றி கடலுக்கு சென்று வருவார்கள். எனவே மீன்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி மீனவர்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்றனர்….