Thursday, July 4, 2024
Home » வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக தொடர் போராட்டம்

வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுக தொடர் போராட்டம்

by kannappan

தஞ்சை: கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் அதிமுக, கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில், குறைவான வாக்கு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இம்முறை அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும் என நம்பியிருந்த நிலையில், கும்பகோணம் தொகுதியை கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கியது. இதில் அக்கட்சியின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். இந்த செய்தி அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்தது. அதிமுக வேட்பாளரை அறிவிக்க கோரி கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோயில் பகுதியில் 2வது நாளாக நேற்று முன்னாள் பாசறை செயலாளர் எம்ஜிஆர் தீபன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தோகுதிக்கு அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ கோவிந்தராசு,  முன்னாள் எம்எல்ஏ திருஞானசம்பந்தம் உள்ளிட்ட 20 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், திருஞானசம்பந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 1996, 2001ம் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரண்டுமுறை எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த 2016ம் ஆண்டு தமாகாவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர். அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தொண்டர்களும், தலைவர்களும் இருக்கும்போது தமாகாவில் இருந்து விலகி வந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிமுக தலைமையை கண்டித்தும், வேட்பாளரை உடனடியாக மாற்ற கோரி கருப்புக்கொடி மற்றும் அதிமுக கொடியுடன் ஒன்றியக்கவுன்சிலர் அருள்நம்பியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.எம்எல்ஏ-நிர்வாகி மோதல்குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் போட்டியிடுகிறார். இவர், நேற்று கோத்தகிரி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்றார். அப்போது, மேடையில் வெலிங்டன் கன்டோன்மென்ட் முன்னாள் துணைத்தலைவர் பாரதியார் நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு மேடைக்கு செல்ல முயன்றார். ஆனால் அவரை பாரதியார் மேலே ஏற விடாமல் தள்ளிவிட்டதாக தெரிகிறது. அதையும் மீறி சாந்திராமு மேலே செல்ல முயன்றார். அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….

You may also like

Leave a Comment

2 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi