வேட்டைக்கு சென்ற போது விபரீதம்: பன்றிக்கு பதிலாக வாலிபர் சுட்டுக்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கோட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் இன்ஷாத் (27). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் நண்பர்களுடன் அங்குள்ள ஒரு பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் சென்று உள்ளார். அப்போது ஒருவர் சுடும்போது தவறுதலாக இன்ஷாத் மீது குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை உடனே மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இன்ஷாத் பரிதாபமாக இறந்தார். அதைத் தொடர்ந்து இன்ஷாத்துடன் பன்றி வேட்டைக்கு சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் பன்றியை சுடும் போது தவறுதலாக இன்ஷாத் மீது குண்டு பாய்ந்ததாக அவர்கள் கூறினர்….

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; 2027ல் உபி பாஜ அரசு அகற்றப்படும்: சமாஜ்வாடி எம்எல்ஏ பரபரப்பு பேச்சு