வேடசந்தூர், செப். 24: வேடசந்தூர் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விட்டல்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கமலேசன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கமலேசனை கைது செய்து, அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.