வேடசந்தூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர், செப். 14: வேடசந்தூர் வட்டார அங்கன்வாடி வட்டார அலுவலகத்தின் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். வட்டார தலைவர் அமிர்த சிந்தாமணி, வட்டார செயலாளர் புஷ்பலதா முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேடு 3, கிரேடு 4 என முறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் பணியாளர்களுக்கு ரூ.25,000 உதவியாளர்களுக்கு ரூ.21,000 வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். வட்டார பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்