வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.25 ஆயிரம் வரைவோலை: மாவட்ட கவுன்சிலர் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம்  8வது வார்டு  மாவட்ட குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ், வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரத்தை வரைவோலையாக ஆர்த்தியிடம் வழங்கினார். அப்போது, தன்னை போன்ற  மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யும்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் சார்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.அவருடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்….

Related posts

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு